இலங்கையின் போர் குற்றங்கள் :

இலங்கையின் போர் குற்றங்கள் மேலும் மேலும் சேனல் 4 திடுக்கிடும் தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது : நம் தமிழர்கள் பட்ட, படுகிற அவஸ்தைகள் தோண்ட தோண்ட புதையல் போல, கொடூர முகங்கள் தான் பட்ட கஷ்ட்டங்களை காட்டிவண்ணம் உள்ளன. போரால் கெடைக்காத வெற்றி உலக தமிழர்களால் எழுப்ப படும் ஓசையால் கிடைக்கும் என்ற நம்பிக்கை வலுக்கிறது. ஆம் பெண்களின் கதறலுக்கு கண்டிப்பாக பலன் கிடைத்தே ஆகவேண்டும்.

கீழ்காணும் செய்தியை படித்தால்.........

போரின் இறுதி நாட்களில் நடந்த கொடூரங்கள் குறித்து பெர்னாண்டோ என்ற ரா ராணுவ வீரர் `சேனல் 4' தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி, கதி கலங்க வைத்துள்ளது.

தனது பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய சக ராணுவ வீரர்கள், கண்ணில் பட்ட அப்பாவி மக்களை எல்லாம் மிருகத்தனமாக சுட்டுக் கொன்றனர். மரத்தில் கட்டி வைத்து உதைத்தனர். துடிக்க துடிக்க அவர்களுடைய நாக்குகளை அறுத்து எரிந்தனர். பெண்கள், முதியவர்கள், குழந்தைகளையும் கூட விடாமல் கொன்று குவித்தனர். அப்படி கொல்லப்பட்டவர்கள் யாரும் விடுதலைப் புலிகள் அல்ல. சாதாரண குடிமக்கள்தான். பெண்களை அடித்து, உதைத்து, துன்புறுத்தி கற்பழித்தனர்.அந்த கொடூரத்தை தடுக்க முயன்ற அவர்களுடைய பெற்றோர்களை அந்த இடத்திலேயே சுட்டுக் கொன்றனர். மருத்துவமனையில் தமிழ் இளம்பெண் ஒருவரை எனது சகாக்கள் 6 பேர் சேர்ந்து கற்பழித்த கோரத்தை என் கண்களாலேயே பார்த்தேன்.ராணுவத்தினரின் செயல்கள் மிருகங்களை விட மோசமாக இருந்தது. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் சிதறிக் கிடந்ததை பார்த்தேன்.இவ்வாறு தனது பேட்டியின் போது சிங்கள ராணுவ வீரர் பெர்னாண்டோ தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment