அண்ணா ஹசாரே ஊழல் எதிர்ப்பு போராட்டம்



அண்ணா ஹசாரே  ஊழல் எதிர்ப்பு போராட்டம் நாளுக்கு நாள் வழுவடையும் நிலையில் ஏனோ அதன் மாற்று கருத்தும் உருவாகி கொண்டும் உள்ளது. இதை விவாத மேடையாக பார்க்க படுவதும், மேல் ஜாதி ......என ஜாதி போர்வை இடுவதும், அவர் காந்தியவாதியே இல்லை எனவும், பிற நாட்டில் ஊழல் மலிவதை விரும்பும் அமெரிக்க அண்ணாவிற்கு ஆதரவு தெரிவிப்பது ஏதோ சதி என்றும், கூட்டம் கூடுவது தவறென்றும், அண்ணா தன் கிராமத்தில் பல அடக்கு முறைகள் விதிக்கும் அதிகார வர்கத்தினர் என்றும்.....பல, பல கருத்துகளும் விவாதங்களும் FB , twitter , ப்ளாக் என வருவது சற்றே குழப்பமாக உள்ளது போல் ஒரு மாயை உருவாகிறது. 
இவரது வயது 74 எனில் இவர் எப்படி காந்தியவாதி, இவர் எந்த சுதந்திர போராட்டம் (64 வருஷம்) ஈடுபட்டார்? எனபது ......காந்தி யோடு போராடினால் மட்டும் தான் காந்தியவாதிய? சில செய்தி நிறுவனகள் சற்று மிகையாக கூறுவது தவறு என்கிறார்கள். அதற்க்கு  அண்ணா என்ன பண்ணுவார்? அதற்காக அவரது இந்த போராட்டம் விமர்சிக்க படுவது நியாயமா? பெரியாரின் முழக்கங்களை பின்பற்றுபவர்கள் என்ன பெரியாரோடு பிறந்தவ்ர்கலா? 
அண்ணாவின் போரட்டத்தை பார்த்து அண்டை நாடான பாகிஸ்தானில் ஒருவர் ஊழலை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவிருக்கிறார். அவரது பெயர் ஜெஹாங்கீர் அக்தர். 68 வயதாகும் இவர் ஒரு தொழிலதிபர். பாகிஸ்தானில் தலைவிரித்தாடும் ஊழலை ஒழிக்கக் கோரி இஸ்லாமாபாத்தில் செப்டம்பர் 12ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர் அறிவித்துள்ளார். இதை எப்படி விமர்சனம் பண்ணுவீர்கள்? அண்ணா பாகிஸ்தான் நபர்களோடு சதி செய்கிற என்ற? 
அண்ணாவின் போரட்டத்தில் படித்தவர்கள், நல்ல பதவியில் இருதவர்கள், .... எல்லாம் சேனலில் (டிவி) தெரிவதனால் மேல் ஜாதியின் ஆதரவு அதிகம் என தவறான கூற்றுகள் பரப்புவது எவ்விதத்தில் நியாயம்? இதை ஒருவர் FB யில் கேட்க அதை ஒருவர் கண்ட வார்த்தைகளை கொண்டு அண்ணாவை விமர்சிப்பது என்பது தவறுதானே. ஆம் இத்தனை வருடங்கள் ஆனாலும் நம் ஜாதி தீ இன்னும் கனன்று கொண்டுதான் உள்ளது இல்லை என்று சொல்லவில்லை. அதற்காக எந்த செயலை எதனோடு ஒப்பிடுவது என்று ஒரு வரை முறை இல்லையா? அதை தாண்டி நம் போராட்டம் இருக்க வேண்டாமா? நம் வரி பணத்தை கோடி கோடி யாக கொள்ளை யடிக்கும் கூட்டத்தை விட்டு விடலாமா? இது ஜாதி, மதம்,இனம்,மொழி,தாண்டி நம் நாட்டு நலனை தானே பார்க்க வேண்டும். ஒரு வேலை இந்த பிரிவினை வாதத்தை தூண்டுவது அந்த அரசியல் நரிகளின் வேலையோ!!!!!!!!. 
கூட்டம் கூட்டுவது, இது அரசியல் வாதிகள் ஆரம்பித்து வைத்தது. கூட்டம் இல்லா போராட்டங்கள் அரசியல் பிரமுகங்களுக்கு உறைப்பது இல்லை. பிரம்மாண்டங்கள் வரவேற்க படுகின்றன. இந்த கூட்டம் தானே அவர்களை பணிய செய்கிறது. இல்லை என்றால் ஏறி மிதித்து விடுவார்கள்.
மும்பை டப்பாவாலாக்கள் (உணவு எடுத்து செல்லும் 5000 பணியாளர்கள்) அவர்களது 125 ஆண்டு கால சரித்திரத்தில் ஒரு நாள் கூட  இதுவரை பணியிலிருந்து விலகி இருந்ததே இல்லை. மழையோ, வெயிலோ, புயலோ இவர்கள் பணியாற்றத் தவறியதில்லை. எந்தக் காரணத்திற்காகவும்  வேலையை நிறுத்தியதில்லை. இருப்பினும் அன்னாவின் போராட்டம் நியாயமானது என்று தெரிந்ததால் அவரை ஆதரித்து ஒரு நாள் மட்டும் பணி செய்யாமல் போராட்டம் நடத்தினார்கள். இவர்கள் என்ன ஜாதி....இது போன்ற போராட்டங்கள் எல்லாம் தாண்டி நேயத்துடன் செயல்பட வேண்டும். இவர்கள் மட்டும் இல்லை செக்ஸ் தொழிலாளர்கள் கூட கலந்து கொண்டனர்.
தென் இந்தியாவில் குறிப்பிடும் வகையில் பெரிய போரட்டங்கள் நடை பெறவில்லை என்ற குற்ற சாட்டு, மற்றும் இதற்கு அதரவு கரம் திரட்ட அண்ணா குழுவினர் தவறிவிட்டனர் என்ற குற்றசாட்டும் சற்று யோசிக்க வேண்டியவை. சுதந்திர போராட்டங்கள் எல்லாம் சரியான  தலைவர்கள் ஒவொரு மாநிலத்திலும், மாவட்டத்திலும் நியமித்து அவர்கள் துணை கொண்டு பல கருத்தரங்குகள், நாடகங்கள் என மக்களை கொஞ்சம் உசுபேத்தி தான் ஆதரவு திரட்டினார்கள். ஆனால் இங்கோ நம் போராட்டமே தலைவர்களுக்கு எதிர்த்து தான். இருப்பினும் வட நாட்டவர்களை எழுப்பி விட்ட அந்த தலைவர்கள் கொஞ்சம் தென்நாட்டவர்களில் சில நல்ல தலைவர்களின் துணை கொண்டு இன்னும் கொஞ்சம் மக்களை நல்லாவே தேற்றி இருக்கலாம். நம் மக்கள் நம் பாஷையில் உசுபேற்றினால் தான் மடக் என உறைக்கும் இல்லை எனில் நமக்கென்ன வென இருந்து விடுவார்கள். ஆனால் ஒன்று, கொஞ்சம் சரியாக திட்டம் மிட்டு நடத்தினால் வட நாட்டையெல்லாம் நம்மவர்கள் சாபிட்டுவிடுவார்கள். 
போராட்டங்கள் செய்ய விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் யாரையும் அவமதிக்காமல், விமர்ச்சனகள் போராட்டதிற்கு வெற்றியை கூட்டும் வண்ணம் இருக்குமாயின் இதில் வெற்றிபெறலாம். அதை தவிர்த்து நம் பிரிவனைகளை, வேறு கோபங்களை இப்போது காட்டாமல் .....அல்லது சற்றே ஒதுங்கி போராடுபவர்களை யாவது வாழ்த்தி வழியனுப்புங்கள். 




  

இலங்கையின் போர் குற்றங்கள் :

இலங்கையின் போர் குற்றங்கள் மேலும் மேலும் சேனல் 4 திடுக்கிடும் தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது : நம் தமிழர்கள் பட்ட, படுகிற அவஸ்தைகள் தோண்ட தோண்ட புதையல் போல, கொடூர முகங்கள் தான் பட்ட கஷ்ட்டங்களை காட்டிவண்ணம் உள்ளன. போரால் கெடைக்காத வெற்றி உலக தமிழர்களால் எழுப்ப படும் ஓசையால் கிடைக்கும் என்ற நம்பிக்கை வலுக்கிறது. ஆம் பெண்களின் கதறலுக்கு கண்டிப்பாக பலன் கிடைத்தே ஆகவேண்டும்.

கீழ்காணும் செய்தியை படித்தால்.........

போரின் இறுதி நாட்களில் நடந்த கொடூரங்கள் குறித்து பெர்னாண்டோ என்ற ரா ராணுவ வீரர் `சேனல் 4' தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி, கதி கலங்க வைத்துள்ளது.

தனது பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய சக ராணுவ வீரர்கள், கண்ணில் பட்ட அப்பாவி மக்களை எல்லாம் மிருகத்தனமாக சுட்டுக் கொன்றனர். மரத்தில் கட்டி வைத்து உதைத்தனர். துடிக்க துடிக்க அவர்களுடைய நாக்குகளை அறுத்து எரிந்தனர். பெண்கள், முதியவர்கள், குழந்தைகளையும் கூட விடாமல் கொன்று குவித்தனர். அப்படி கொல்லப்பட்டவர்கள் யாரும் விடுதலைப் புலிகள் அல்ல. சாதாரண குடிமக்கள்தான். பெண்களை அடித்து, உதைத்து, துன்புறுத்தி கற்பழித்தனர்.அந்த கொடூரத்தை தடுக்க முயன்ற அவர்களுடைய பெற்றோர்களை அந்த இடத்திலேயே சுட்டுக் கொன்றனர். மருத்துவமனையில் தமிழ் இளம்பெண் ஒருவரை எனது சகாக்கள் 6 பேர் சேர்ந்து கற்பழித்த கோரத்தை என் கண்களாலேயே பார்த்தேன்.ராணுவத்தினரின் செயல்கள் மிருகங்களை விட மோசமாக இருந்தது. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் சிதறிக் கிடந்ததை பார்த்தேன்.இவ்வாறு தனது பேட்டியின் போது சிங்கள ராணுவ வீரர் பெர்னாண்டோ தெரிவித்து உள்ளார்.

மாற்றங்கள் இல்லையோ...

என் மகனுக்கு 
கணிதம் பயிற்று வித்தபோது
அவன் கண்ணில் 
அந்நாளைய திறு திறு 
என்னை கண்டேன் 
அதேபோல் 
அவன் மனக்கண்ணில்
இந்நாளைய நர நர 
ராட்சசனை 
கண்டிருப்பனோ....

பிரபல பின்னணி பாடகி சித்ராவின் மகள் நந்தனா


பிரபல பின்னணி பாடகி சித்ராவின் 8வயது மகள் நந்தனா, நீச்சல் குளத்தில் விழுந்து பலியானார். பிரபல பின்னணி பாடகி சின்னகுயில் சித்ரா. மலையாளத்தை சேர்ந்தவரான இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஒரியா, பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவருக்கும் ‌விஜயசங்கர் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு 8வயதாகிறது.


இந்நிலையில் துபாயில் இசைநிகழ்ச்சி ஒன்று இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது குழந்தையுடன் துபாய் சென்றார் சித்ரா. சித்ராவுடன் பிரபல பின்னணி பாடகர்கள் ஹரிஹரன், சாதனா சர்க்கம், நரேஷ் ஐயர், பென்னி தயால், விஜய் பிரகாஷ், ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரஹினா உள்ளிட்ட பலர் சென்றனர். இவர்கள் அனைவரும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களை பாட இருக்கின்றனர். துபாயின் எமிரேட்ஸ் ஹில்ஸில் உள்ள பிரபல இந்திய தொழிலதிபர் திலீப் ரவுலான் என்பவர் வீட்டில் சித்ரா தனது குழந்தையுடன் தங்கியிருந்தார்.


சித்ராவின் மகள் நந்தனா வீட்டினுள் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரா விதமாக அங்கிருந்த நீச்சல் குளத்தில் தவறி விழுந்தார். இதனையடுத்து உடனடியாக குழந்தை நந்தனாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் நந்தனா இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 15வருடமாக தவமிருந்து பெற்ற மகள் இப்போது கண்முன் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார் சித்ரா. வீட்டினுள் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரா விதமாக அங்கிருந்த நீச்சல் குளத்தில் தவறி விழுந்தார். இதனையடுத்து உடனடியாக குழந்தை நந்தனாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் நந்தனா இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 15வருடமாக தவமிருந்து பெற்ற மகள் இப்போது கண்முன் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார் சித்ரா - செய்தி  


அவர் படிய சிறந்த பாடல்களே இன்று அவர் சோகம் சொல்லும்  ......
இளைய ராஜாவின் இசையமைப்பில் 'நீ தானா அந்தக்குயில் ' என்ற திரைப்படத்தில் அவர் பாடிய 'பூஜைக்கேத்த பூவிது' என்ற பாடலும், 'கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட ' என்ற இரு பாடல்களும் அவருக்கு புதிய இசையுலகிற்கு திறவுகோலாக அமைந்தன. "நான் ஒரு சிந்து ...." என்ற இலையரஜாவின் பாடலில் என்னை வசிகரித்த ...மன்னிக்கவும் எல்லோரையும் வசிகரித்த சித்ரா ...கடைசியாக நான் மிகவும் விரும்பி கேட்கும் " ஒரு நாள் மட்டும் சிரிக்க ...." என்ற பாடலில் நம்மை ஏங்க வைத்தார். ஆனால் இன்று அவர் ஏங்கலில் .......


அந்த படலை கீழ் வரும் வீடியோவில் கேட்டு ஏன் கண்ணீரை சிறுமி நந்தனா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய சமர்பிக்கிறேன். அந்த பாடலில் வரும் சில வரிகள் கீழே ...... 
தென்றலுக்கு நன்றி ....

கண் பார்வை பறித்து என்னை காண சொல்கிறாய் ...
வெந்நீரை ஊற்றி ஏன் பூக்க சொல்கிறாய் ....
ஊமையாய் மாற்றியே எனை பாடவும் கேட்கிறாய்...
நான் சரியா இல்லை தவறா நான் கனவு எழுதி களைந்து போன கதையா...முருகா...முருகா 

அவன் அன்றி யாரும் அவர் சோகம் தீர்க்க இயலாது ....

வெற்றித் திருமகள் வரிந்து வந்து புகழாரங்கள் சூட்டியபொழுதும் சித்ரா அவர்கள் தன்னுடன் பிறந்த விட்டகலாத மாறாத புன்முறுவலுடன் எளிமையாக , இனிமையாக எல்லாவற்றையும் சமசித்தத்துடன் ஏற்று காட்சிக்கு எளியவராக நிற்பது ஒரு அரும் பண்பாடல்லவா? அவர் தன்னை இச்சிகரத்தை அடைய உதவி செய்த ஒவ்வொருவருக்கும் தம் உளமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறார். திருமணமாகி பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் நந்தனா என்னும் மழலைக்கு தாயாகிய சித்ரா, மகளின் வருகைக்குப் பிறகு தன் வாழ்வு முழுமை பெற்றதாக உணருகிறார்.14 ஏப்ரல் 2011அன்று துபாயில் உள்ள ஒரு செயற்கை நீச்சல் குளத்தில் ஏற்பட்ட விபத்தில் நந்தனா உயிர் .........

What is the Jan Lokpal Bill?


What is the Jan Lokpal Bill?Who is Anna Hazare fighting for?

It is a Bill drafted by Santosh Hegde, former Supreme Court judge and the present Lokayukta of Karnataka; Prashant Bhushan, Supreme Court lawyer; and Magsaysay Award winner and social activist Arvind Kejriwal.

According to 'India Against Corruption', the web site where the Bill has been made public, the Jan Lokpal Bill, once passed, will be an "act to create effective anti-corruption and grievance redressal systems at the centre so that effective deterrent is created against corruption and to provide effective protection to whistleblowers".

The salient features of the Bill can be summed up as follows:

1. An institution called 'Lokpal' in the centre and 'Lokayukta' in each state will be set up. These will be independent of the government. No minister can influence their investigations.

2. Investigation in any case must be completed in one year. Trials should be completed in the next one year so that the corrupt officer or politician goes to jail in two years.

3. The loss that a corrupt person caused to the government will be recovered at the time of conviction.

4. If a citizen's request is not completed in the prescribed time in any government office, the Lokpal will impose a financial penalty on the guilty officers, which will be given as compensation to the complainant. So, when the Bill is enforced, you could approach the Lokpal if your passport or voter card is being delayed unnecessarily. The Lokpal will have to get it done in a month's time.

5. What if a Lokpal officer becomes corrupt? The entire functioning of Lokpal/Lokayukta will be completely transparent. Any complaint against any officer of Lokpal shall be investigated and the officer dismissed within two months.

6. All existing anti-corruption agencies -- CVC, departmental vigilance and anti-corruption branch of CBI -- will be merged into the Lokpal, which will have complete powers and machinery to independently investigate and prosecute any officer, judge or politician.

7. The punishment would be minimum 5 years and maximum of life imprisonment

S'pore National Day Rally 2010 Pt 1/8 - 29/08/2010




சிங்கப்பூரின் பிரதம மந்திரி உயர் திரு லீ ஹசீன் லூங் (Lee Hsien Loong ) என்னை கவர்ந்த ஒருவராக... என்னை மட்டும்மள்ள உங்களையும் கவர்த்துவிடுவார். இந்த வீடியோ எட்டு பாகங்களை கொண்டது (1/8......8/8) முழுமையாக தனிமையில் பார்க்கவும். அவர்களது தேசிய 4 மொழிகளில் தமிழும் ஒன்று...கவனிக்க ..... 

இவரது எளிய ஆங்கில உரைநடை, ஆழ்ந்த சிந்தனை, எளிய விளக்கம், மற்றவர்களுக்கு புரியும் படியாக படங்களுடன் விளக்கம், நகைசுவை..... மற்றும் நம் அரசியல்வாதிகளிடம் இல்லாத நேர்மையான, உண்மையான நாட்டின் மீது வைத்துள்ள அக்கறை....

நம் தலைவர்களின் உரையை கவனித்து பாருங்கள் எங்கோ யாருக்கோ புரிந்தால் போதும் என்று Hi -Tech ஆங்கில வார்த்தைகள், தலை சுற்றும் statistical analysis, தனது மெத்த மேதாவி  தனத்தை இந்த நாட்டின் வளர்ச்சியில் காட்டாமல் தன் ஆங்கில புலமையில் காட்டும் ஊழல் அரசர்களின் ........  ஒரு தலைவனின் பேச்சு  எப்படி இருக்க வேண்டும் பாருங்கள்.

அவரது பேச்சின் துளிகள்.....  
  1. 2007 ம ஆண்டு உலகமே தத்தளித்து கொண்டு இருக்க, கடனே இல்லாமல் தன் நாட்டை எவ்வாறு மீட்டார் (1/8 )
    1. ஊதிய உயர்வு எதிர்பாரா உழைப்பு, 
    2. எறும்புகளின் மலை கால சேமிப்பை பற்றி....
    3. 3% சிங்கப்பூர் தொழில் வளர்ச்சி .... 
    4. உற்பத்தி உயர்வின் முக்கியத்துவம்.
    5. தொழிலாளிகளின் புதிய சிந்தனை மற்றும் அவர்களின் பறந்த, உயர்ந்த பார்வை ( கழுகு பார்வை..)
    6. பெரிய நிறுவனகளின் கூட்டு முயற்சியில் சாதித்தவை...அதனால் அரசாங்கம் அடைந்த வரி .... (மெக்ஸிகோ என்னை கசிவு) 
    7. ஆட்களை குறைத்து, ஆக்கங்களின் மூலம், குறைந்த செலவில், கடுமையில்லா   நிறைவான உழைப்பில்.....
என அவரது உரையை கானுங்கள்      .....முதல் பாகம் 






இரண்டாம் ......மூன்றாம் ......பாகங்கள் வரசையாக.....

Watch all 8 parts in my Blog

http://deeparthik.blogspot.com/



S'pore National Day Rally 2010 Pt 2/8 - 29/08/2010




வாருங்கள் உங்களை அழைக்கிறது சிங்கப்பூர்.....

என்ன புரியவில்லையா கேளுங்கள் அவர்களுக்கு ஒரு நூறு ஆயிரம் ஆட்கள் தேவை....
  1. ஆட்களின் தேவையை உணர்த்துதல்
  2. ஆட்களின் வரவால் நமக்கு வரவே அன்றி தொல்லை இல்லை...என சிங்கப்பூர் மக்களுக்கு புரிய வைக்கும் விதம்
  3. மைக்ரோசாப்ட் நிறுவனம் எவ்வாறு முன்னேறுகிறது ....அவர்களின் தொலை நோக்கு  பார்வையும், அந்நிய மக்களை பயன்படுத்தும் விதமும்....
  4. முக்கியமாக அந்நிய மக்களோடு அன்யோநியமாக பலகுதலின் முக்கியத்துவமும்.... 









S'pore National Day Rally 2010 Pt 3/8 - 29/08/2010


சிங்கபுரின் முக்கிய பிரச்னை 

மக்கள் தொகை குறைவு ......

  1. அந்நியர்களின் அரவணைப்பை அழகா எடுத்துரைக்கும் விதம்.....



S'pore National Day Rally 2010 Pt 4/8 - 29/08/2010

போக்குவரத்து வசதிகள்
  1. புகை வண்டியின் மேம்பாடுகள்... 
  2. பிரச்சனைகளை சரியாக கண்டுகொண்டு அதை சரி செய்ய தேவையான வழிமுறை.....
  3. நொடிகளின் சேமிப்பில் ரயில்களின் எண்ணிகையை அதிகரித்தல்...
  4. சிரம்களின் போது பொறுமை காக்க வேண்டுதல்...
  5. நெட்வொர்கிங்கின் முக்கியத்துவம் அதற்காக செலவிட போகும் 60 பில்லியன் டாலர்....
  6. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை .....
  7. அடிக்கடி வாங்கி  விற்பதை தவிர்த்து .....எல்லோரும் பயனுறும் வண்ணம் சிறிய முதலீட்டில் வீடு, கடன் வசதி....
  8. Gradually Appriciating asset ......
  9. எல்லோருக்கும் வீடு....அந்நியர்களின் வசதிகளை கவனிப்பு....
  10. வெற்றி அரசின் கையில் மட்டும் இல்லை நம் பழகும், அனுசரிக்கும், நட்பில்.....அந்நியர்களை அரவணைத்து மேம்பாடு கானல்....



S'pore National Day Rally 2010 Pt 5/8 - 29/08/2010

கல்வியின் மேம்பாடு...
  1. கணிதம் மற்றும் அறிவியலின் முக்கியத்துவம்
  2. விழையாட்டு, கலை, இசை, நடனம்....எல்லாம் அவர்களின் கலாச்சாரத்துடன் மற்ற கலைகளையும் இணைத்தல்.....
  3. NCC இந்திய மண்ணில்...
  4. Primary ஸ்கூல்இன்  மாணவ, ஆசிரியர்களின் சதவிகிதத்தை மேம்படுத்துதல்....
  5. அவரவர்களின் தாய் மொழியின் முக்கியத்துவம் அதன் மேம்பாடு....
  6. பரீட்சை - அவர் கொடுக்கும் விரிவுரையை பாருங்கள்
  7. அனைவரும் ஒரே பள்ளியை நோக்கி செல்லாமல் அந்த பள்ளியின் சிறந்த திட்டத்தை அணைத்து பள்ளியிலும் கிடைக்க பெற்று அனைவரும் பயனுற....




S'pore National Day Rally 2010 Pt 6/8 - 29/08/2010

கல்வியின் முக்கியத்துவம் அவர் 1/2 மணி நேரத்திற்கும் மேலாக அவர் உரையில் இருப்பதில் இருந்து அவர் அதற்க்கு கொடுக்கும் மரியாதையை.....
  1. நன்கு படிப்பவர்களை வெளி நாட்டிற்கு செல்ல விடாமல் நம் நாட்டின் மேம்பாட்டுக்கு உபயோகம் படுத்துங்கள்....வசதி செய்து தாருங்கள் என அவரின் உரை மேலும் மேலும் மேன்மை......
  2. டாக்டர்களின் எண்ணிக்கை....
  3. 20 ஆண்டு கல்வியின் தொலை நோக்குதலும் அதற்க்கு அர்பணிக்க அழைப்பும்......
  4.  







S'pore National Day Rally 2010 Pt 7/8 - 29/08/2010


இளையவர்களின் ஆளுமை....
இளையவர்களின் அன்பு....
இளையவர்களின் தொண்டை வரவேர்தல்...
முதியவர்களின் பார்வை முன்னால் இளையவர்கள் 

தலைவர்களின் தன்மை ...தன்னை ஈடுபடுத்தி தன் நாட்டின் மேம்பாட்டில்
அக்கறை கொள்ளல்.....


S'pore National Day Rally 2010 Pt 8/8 - 29/08/2010

விளையாட்டில்...

அனைத்திலும் அவரது பார்வை மெய்சில்லிர்க்க வைக்கிறது ....

நமது ....

வரும் தேர்தலில் எல்லோரும் வாக்களிப்போம்
இளயவர்களின் திறன் நம் தேசத்தையும் மாற்றட்டும்
முதிய ஊழல் திறமைசாலிகளை
நாட்டை விட்டு அப்புற படுத்துவோம் .........



Osho: Why Jews have the most jokes


From "http://rsachi.blogspot.com/




Osho is talking about laughter. He says both laughter and boredom are the signature of intelligence. He says the Jews have the most collection of jokes. And he points out that they have also won the most Nobel prizes.

I go and check.

This is what I find:

JEWISH NOBEL PRIZE WINNERS
JINFO.ORG

At least 180 Jews and persons of half- or three-quarters-Jewish ancestry have been awarded the Nobel Prize, accounting for 22% of all individual recipients worldwide between 1901 and 2009, and constituting 36% of all US recipients during the same period. In the research fields of Chemistry, Economics, Physics, and Physiology/Medicine, the corresponding world and US percentages are 27% and 39%, respectively. Among women laureates in the four research fields, the Jewish percentages (world and US) are 38% and 50%, respectively. (Jews currently make up approximately 0.25% of the world's population and 2% of the US population.)
Chemistry (31 prize winners, 20% of world total, 28% of US total)
Economics (27 prize winners, 42% of world total, 56% of US total)
Literature (13 prize winners, 12% of world total, 27% of US total)
Peace (9 prize winners, 9% of world total, 10% of US total)
Physics (47 prize winners, 25% of world total, 36% of US total)
Physiology or Medicine (53 prize winners, 27% of world total, 40% of US total)
See also data on "other Nobels":
Jewish Recipients of the Kyoto Prize (25% of recipients)
Jewish Recipients of the Wolf Foundation Prize (34% of recipients)
Jewish Recipients of the US National Medal of Science (38% of recipients).

என் பார்வையிலும் வாழ்விலும் பெண்களின் ஆளுமை - பகுதி 1



பெண்கள்...

பெண் என்றாலே நம் கண் முன்னே வருவது அழகு. பெண்மை, ஆண்மை இரண்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம். ஆனால் ஆண்மை என்றால் உடனே நினைவுக்கு வருவது வீரம். ஏன் இந்த உணர்வு நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாய் நம் உடற் கூற்றிலும், மூளையின் மையத்திலும் ஏன் உயிர் அனுவிழும் முறுக்கேற்றி ஆழமாய் ஆணி அடித்துவிட்டனர். அது இன்றும் பெண்ணை ரசிபதிலும், ருசிபதிலும் தன் வீரத்தை காட்டிகொண்டு இருக்கிறான். 

பொதுவாக பெண்கள் இளம் வயதில் நமக்கு ஏற்படும் அதே உணர்வையே தங்கழுக்குளும்  கொண்டுள்ளனர். அதை தூண்டி தனக்கு அடிமை யாக்கும் ஆண்மையும் ஒரு பெண்மையே. 

பெண்களை சரி நிகர் கோணத்தில் கண்டு ரசிக்க தெரியவில்லை என்றால் அவன் சந்ததிகளை மேலும் பெருகாமல் வதைத்து  விடுவதே மேல் அல்லவா. (அவர்களுக்கு குழந்தைகளை பெறாமல் இருப்பதை கூறுகிறேன்) 

பெண்மையை அருகில் இருந்து அவர்கள் உலகை ரசித்து பாருங்கள் அவர்கள் உலகமே அழகு தான். நான் சிறுவயதில் எப்பவும் விழையாட்டவே வாழ்ந்து வந்தவன். அழகான பெண்ணின் ஆளுமை எப்பவும் என்னோடவே பயணித்து வந்து உள்ளது. இங்கே அழகான பெண் என்பது நம்மை சில வார்த்தைகளால், சில பார்வைகளால், சில கொஞ்சழ்களால் ...எப்படி என்று எனால் விரிவு செய்ய முடியவில்லை ஆனால் நிச்சயமாய் உடல் கூற்றால் அல்ல. ஆனால் ஏன்...  வளர்ப்பில் தாயின் பேச்சுக்கள் என்னை ஆளவில்லை, மாறாக என் தந்தையின் தோழமையே ஆளுமை கொண்டுள்ளது. 


சில அனுபவங்களும் ... பார்வைகளும்....

ஒரு முறை என் சிறு வயதில் என் வீட்டிற்கு அருகில் ஒரு புது குடும்பம் குடியேறியது. பொதுவாக நாம் புதியவர்களை, மூத்தோர்களை அத்தை, மாமா என்போமே அது போலவே நானும்.  அவர்கள் இளம் வயதே, ஒரு சிறு பெண் கை குழந்தை தவழ்த்த வண்ணம் வீடு எப்பவும் கலகலப்பாய் இருக்கும். அருகில் இருந்த அணைத்து குடும்பமும் சற்று வயது முதியவர்களே அவர்களை ஒப்பிடுகையில். அதுவும் அந்த காலகட்டத்தில் அந்த கிராமத்தில் சற்று காலம் தாண்டி பரந்த எண்ணம் உள்ளவர்கள் சிறிதே (என் தந்தையை போல்). அந்த காலகட்டத்தில் இரவு உடை என்று பெண்ணிற்கு (நைட்டி) அந்த ஊரில் தனியாக இல்லை. முதன் முதலில் அந்த உடை தரித்தவர் அந்த ஆண்டி தான். ஏன் என்றால் அவர்கள் நகரத்தில் இருந்து வந்தவர்கள். ஆனால் அதை அங்கிருத்தவர்கள் பார்த்த பார்வைகள் வேறு. " என்ன பெண் இவள் கன்றாவி உடை அணித்து சின்ன பிள்ளைகளை கெடுத்து விடுவாள் போல நம்ம கலாச்சாரம் என்ன ... " என்று பெண்களே மருகி நின்றனர். ஆண்களை கேட்கவா வேண்டும் என் காது படவே " சரியான கட்டை..." என்று உரைதவர்கள் உண்டு. அவர்கள் கண் போகும் பார்வை என்னையே என் தந்தை இடம் சில கேள்விகளை கேட்க வைத்தது. " ஏன் அய்யா அந்த மாமாக்கள் அந்த ஆண்டிய  ....... இப்படி பேசுகிறார்கள்? ஏன் இன்று கூட நம் அம்மாவிடம் இன்னொரு அத்தை எங்க அந்த உலகழகி நிமிட்டிகிட்டு வருவாழே ... வந்தாலா? என கேட்கிறார்கள்" என்றேன். என் வார்த்தைகளை உற்று கேட்டவர் என் தோல் மீது கை வைத்து "வா வெளியே போகலாம்" என்றார். 


நடந்து கொண்டே சிறிய யோசனைக்கு பின்னர் " கண்ணா ...... " என்று பெரிய ஒரு விளக்கமே கொடுத்தார். அதில் எனக்கு பதிந்தவை ஆடைகள் நம் உடலை மறைக்கவே. சில சமயம் அதுவே நம் கௌரவத்தை நிர்ணயக்கிறது ....இதில் தான் பார்வைகள் மாறுகின்றது, பொறாமையும் சில சமயம் ...இது ஆற்றாமையால் கூட விளையும் பெண்களுக்கு. இதை பெரியவர்கள் அல்லது ஆண்கள் தனக்கு வசதியாக்கி கொண்டு தவறான வார்த்தைகள் பேசுவார்கள் பார்வையும் பார்ப்பார்கள். அதை பெரியதாக்கி கொள்ளாமல் உடை நம் வசதிக்கு தக்கவாறு (இதில் வசதி என்பது பணம் அல்ல) காலகாலமாய் மாற்றங்கள் கொண்டுவரும், மாற்றங்களை சரியான கண்நோடத்தில் கொண்டு செல்வது தான் நல் அறிவாகும். மனதை விசாலமாய் கற்பதில் அலையவிடு இது உன்னை வேறு பாதைக்கு இட்டுசென்றுவிடும் என்பதே நான்  உணர்வது. 


காலகாலமாய் மாற்றங்கள் சில (பல) குறுகிய சிந்தனை வாதிகளிடம் குறுகிய வக்கிர கண்ணோட்டத்தையே விட்டு சென்றுள்ளது. இது எல்லாம் ஒரு மேட்டரா என்றால், இன்றும் பெண்ணின் உடைகளை எத்தனை கண்கள் கற்பழிகின்றது. உடைகளை ரசிப்பது இரு வகைகள் சாதரணமாக பெண் தனக்குரிய, தனக்கு பொருந்தி வரும் உடைகளை அணியும் போது அதே கண்ணோட்டத்துடன் பார்ப்பது ஒரு வகை. அதையே சற்று ஊடறுவி அந்த உடை வழியே அவள் தேகத்தை யூகிப்பது வேறு வகை. சில பெண்கள் தன் தேகத்தை ரசித்து போகட்டும் என்றும் உள்ளனர், அந்த சிறு விகிதத்தை ஆண்களின் பெருவாரியினர் சுட்டி காட்டி வாதாடுவது அவர்கள் அசிங்கமான விதண்டாவாதமே அன்றி வேறு என்ன. 




என் பள்ளி பருவத்தில் ஓவியம் சற்று வரைவேன். அப்போதுதான் புதிதாக (என்ன எப்பவும் யாராவது புதுசா வந்துட்டே இருக்காங்க ....என்கிறேர்களா. என்ன செய்ய புதிசில் தானே பார்வையின் மாற்றங்களும் தெரிகின்றது) ஒரு டிராயிங் மிஸ் வந்திருந்தார்கள். ஓவியம் போலவே சற்று மிகையான அழகு. அவர்களுக்கு என் ஓவியம் மீது சற்று மரியாதை உண்டு. ஆனால் அதையே ஒரு சக ஆசிரியர் " என்ன கார்த்தி எப்பவும் மேடம் உன்னிடம் சிரிசிகிட்டே தோள்ல கை போட்ராங்க... நல்ல வழத்திய இருக்கேன்ன...அப்படி என்னடா..... ஒருவேளை சிருசுணா புடிக்குமோ..." என்று என் நண்பர்கள் மற்றும் சில பெண், ஆண் ஆசிரியர்களோடு சேர்ந்து சிரித்தார்கள். இந்த வக்கிரம் எங்கே இருந்து வந்தது....


ஆனால் மேலே பார்த்த அனைத்தும் எனக்கு எவ்வாறு இருந்தது என்று கேட்பது புரியுது...


அந்த ஆண்டி என்னிடம் எப்பவும் தம்பி என்ற அன்பில் தான் என்னை வார்த்தார்கள். ஒரு முறை நான் பாடத்தில் பெயிலான போது...என்னை என் அம்மா பதம்பார்த்த போது என்னை என் அம்மாவிடம்மிருந்து விடுவித்து அழைத்து போய்விட்டார்கள். அவர்கள் வீட்டில் என் அருகில் அமர்த்து   என் முதுகை தடவி ஆறுதல் கூறி முத்தமும் மிட்டாரகள். அது என்னை சற்று ஆறுதல் 
படுதியதே அன்றி என் நண்பர்கள் பார்த்த விதத்தில் அழைத்து செல்லவில்லை அந்த முத்தம்.


அதே போல் என் ஆசிரியை, பல தடவை என்னை தன் தோளோடு தோளாய் என் தோளில் கை போட்டு " சபாஸ்..." சொல்லி இருக்கிறார். ஏன் என் சில பெண் ஓவியத்தை பார்த்து செல்லமாய் " உதடு இப்படி வரணும், நெற்றி வழிந்து வரணும், செஸ்ட்  தூக்கி வரையனும்..." என்று தலையில் கொட்டி  " பெண்கள்ன ரொம்ப பிடிக்குமோ.." என்று தன் அளவான புன்னகையில் என் ரசனையில் மேருகேற்றியதுண்டு. அவை யாவும் சிறிது கூட என்னை தவறாக பாதித்தது இல்லை. 


என் பார்வையில் பெண்கள் தொடரும்.... 
  




    .


     - 







புகை..

புகை...

இது என்னுள் அரம்பம்மானது ...
நண்பர்களின் தொற்றா...
தெனாவேட்டின்  ஆரம்பமா...

புகை எனும் பகை 
ஏன் நண்பனானான்...

முதல் புகை ... நாற்றன்களே
இரண்டாம்  புகை ... யோசனைகளே...
பின்னர் ஸ்டைல்...

அவனது நட்பு தொடர்ந்தது 

மெல்ல மெல்ல 
நட்பில் புகை ...
ஓய்வில் புகை...
டீக்கு பின் புகை...
மதுவின் போது புகை...
உணவுக்கு பின் புகை...
கோவத்தில் புகை...
சந்தோசத்திலும் புகை...
காதலில் புகை...
காதல் கவிதையிலும் புகை...
பகையில் புகை...
பேச்சில் புகை...
யோசனையிலும் புகை...

ஒரு நாளில் இரண்டு முறை
இறத்தல் என்பது போய்
 மூன்று...நான்கு...
முறை தினம் இறக்கலனேன்...

தந்தை அன்பில் கொஞ்சம்
தாயின் மிரட்டலில் கொஞ்சம்
நண்பனின் அறிவுரையில் கொஞ்சம்
காதலி கடைகண்ணில் கொஞ்சம்
மனைவியின் மருகலில் கொஞ்சம்
உடல் நல குறைவில் கொஞ்சம்
என வெட்டினாலும் 
தொடரும் சொந்தம்...

புகை ஒரு ஒட்டுண்ணி 

தொடதே என்னை என்ற புகை
என்னை பின்னல் 
காதலியாய் கட்டிகொண்டதேனோ...

புகையில் ஒன்றும் இல்லை
அது
என்னை சாந்த படுத்தவும் மில்லை
சலன படுத்தவும் மில்லை
சல்லி காசுக்கு பிரயோஜனம் மில்லை
ஆனாலும் 
தொட்டு தொடரும் யமன்

மூளை வேண்டாம் என்றது
மனம் ஒன்றே ஒன்று என்றது

தற்போது வாரத்திற்கு 
மூன்று அல்லது நான்காய் 
பயணிக்கிறேன்...

உங்களுக்காக ஒன்றை கூறுகிறேன் 

தொடாதே ...
தொட்டால் ஒன்னை
விடாதே...






கனவுகளின் பயணம் ...


மணம் கனக்கிறது
மனைவியின் மணமறிகையில் ...
அவள் கண்ணீரும் 
கீழ் விழாமல்  தத்தழிக்கையில்...

என்னுள்...   

பணம் கனக்கிறது 
கனவில் எடை தெளிவின்றி...

கோவம் அஹிம்சையாகிறது 
தவறுகளின் விகிதம் கணக்கிடுகையில் ...

நட்புகள் நகைக்கின்றன
வருடத்தின் வளர்ச்சி வாழ்வில் இல்லையென்று...

உறவுகளின் தூரம்
மேற்கில் மறைந்த சூரியனாய் ...

வெட்கம் மறைகின்றது
இகழ்வுகள் முகம் முன் தவழ்கையில்...

நம்பிக்கை நனைகிறது
கழவுகள் கன்னறிந்து   கடக்கையில்...
   
திறமை யோசிக்கிறது
இடது வழதறியா திருடுகையில்....

ரோசம் தமிழகராதியில் அறியேன்
உணவில்
காரம்மிட்டுகொள்  கரையறிவாய் என்றன வழினடத்திகள் ...

முகத்தின் சுருக்கம் சிரைகம்பிகழாய்...
 கிழிஞ்சழ்கள் தடுக்கி விழுந்த குழிகளாய்...

வாழ்க்கை பயணம் வருத்தாழும்
என் உதட்டு புன்னகை 
கண்ணின் ஊடுருவழில்
ஒன்றை உணர்த்துகிறது
சற்றேனும் உலகம்
ஒருநாள்
உன்னை சுற்றுமேன்று....
   

கனவுகளின் பயணம் 








நுகத்தடி

Kamaladevi Aravindan is a bilingual writer in Malayaalam and Tamil.she has written short stories which were published in Tamil Newspapers circulated in Singapore and Malaysia, 

The wonderful small story which inspired me.....

சிறுகதை :-------- ” நுகத்தடி !!! ‘”]

இரண்டு கைகளிலும் பைகளைத் தூக்கமாட்டாமல் தூக்கிக் கொண்டு மாலதி புறப்பட்டாள்.
ரொட்டி, பழங்கள்,மிட்டாய் பேக்கட், அடங்கியவை ஒரு பையில், இவளே சமைத்ததும் ,
கடையில் வாங்கிய உணவுப் பொட்டலங்களுமாக, நெகிழித்தாளில் அழகாக பேக் செய்யப்பட்டு, அடுக்கப்பட்ட பை, இன்னொரு கையில்,,வழக்கம் போல் தோளில் தொங்கும் நீண்ட அழகுப் பை, என எல்லாமுமாக மாலதி,
கணவரிடம் விடை பெற்றபோது, கேசவன் ஒரு நிமிஷம் அவளை அணைத்துக் கொண்டார்.
சட்டென்று அவளுக்கு வெட்கமாகப் போய்விட்டது. வழக்கமாக சொல்லும்” பத்திரமாகப் போய் வா, ”எனும் தாரக மந்திரத்தை ஏனோ கேசவன் சொல்லவில்லை.
”எனக்குத்தெரியும்,” நீ! பத்திரமாய் வருவாய்! என்பது போல் தான் விடை கொடுத்தார்.
அப்பொழுதுதான் கவனித்தாள், ஒருவார்மாக சுவர்க்கடிகாரம் நின்று போயிருந்ததை.
ஆனால் நிற்க ,நிதானிக்ககூட நேரமில்லை.விறு , விறுவென்று, ஓட்டமும் நடையுமாய் நடந்து, டேக்ஸி பிடித்து, வூட்லண்ட்ஸ் சுங்கச்சாவடியருகே வந்தபோது வசந்தி காத்திருந்தாள். வசந்தி சிங்கை சாங்கி விமான நிலையத்தில், வேலை செய்பவள். ஜொகூர்பாருவிலிருந்து தினமும் , சிங்கப்பூருக்கு இரவு வேலைக்கு வந்து , மறுநாள் வீடு திரும்பும் நேரம்,இது தான்.

இந்த நேரத்துக்குள் மாலதி வந்து சேர்ந்தால், வசந்தியுடன் போகலாம்.
இவளது பைகளைத் தூக்கவும், சுங்கச்சாவடி பரிசோதனை முடிந்து, டாக்சி பிடித்து, மருத்துவமனை வரை, உடன் வரவும் வசந்தி உதவுவாள். பின் இவளை இறக்கி விட்டு விட்டு,அதே டேக்ஸியில் சில கிலோமீட்டரே , அருகே உள்ள அவளது வீட்டுக்குப் போய் விடுவாள். மாலதியின் கையிலிருந்த பாதி பாரம் வசந்தியின் கைக்கு மாற , புதிய இமிகிரேஷன் அலுவலகத்தின் நீண்ட , நெடிய பாதையில் இருவரும் நடக்கத் தொடங்கினார்கள். சனிக் கிழமையாதலால், கூட்டம் நெட்டி முறிந்தது. மலேசியாவிலிருந்து வேலைக்கு வந்து திரும்புபவர்களும், வார இறுதியில்,மனைவி, குழந்தைகளைக் காண ஆவலோடு ஓடும், மலேசியர்களும்,சிங்கையிலிருந்து,இவளைப்போல்
காரண காரியத்துக்காகப் போகிறவர்களுமாக, ஓட்டமும் நடையுமாக, மனிதர்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

கைப் பாரமும் , கியூவின் அலமலப்பும், , கால்வலியும் ,எதுவுமே பொருட்டாகத் தெரியவில்லை. இரண்டு சுங்கப் பரிசோதனையும் கடந்து, ஜோகூர்பாரு டேக்ஸி ஸ்டாண்டை அடைந்தபோது,இருவருமே வியர்த்து, விறு விறுத்துப்போனார்கள்.
வசந்தி ஓடிச்சென்று, எதிரிலிருந்த இந்திய உணவகத்திலிருந்து , 2 பெரிய உணவுப்பொட்டலங்களை , கறி, கூட்டு, குழம்பு, சாம்பார், ரசம், மோர், என அவள் சார்பாக வாங்கி வர, டேக்ஸி ஓட்டுனர், இந்தியர் கேட்டார்.
“எங்கே போகணும்மா?”
மாலதி இடத்தைச்சொல்ல ஒரு வினாடி இவளை ஏறிட்டு நோக்கினார். ஏதோ கேட்க முற்பட்டு, பின் என்ன நினைத்தாரோ, கேட்க வந்ததை அப்படியே நிறுத்திக் கொண்டு ,வண்டியை ஓட்டத் தொடங்கினார்.கண்களை மூடி மாலதி காயத்ரி சொல்லத் தொடங்கினாள். இறங்கும் ஸ்தலம் வந்தபோது வசந்தி தொட்டுலுக்க, மாலதி டேக்ஸி ஓட்டுனருக்குப் பணம் கொடுக்கும் நேரத்தில், எல்லா பைகளையும்,
வசந்தி, வண்டியிலிருந்து கீழே பொறுப்பாய் இறக்கித் தர, இப்பொழுது தான் மிகப் பெரிய ஆஸ்வாஸமாக இருந்தது. இது சில மாதங்களாகவே வசந்திக்கும் இவளுக்குமிடையே நிகழும் அன்பின் உடன்படிக்கை. வசந்தியும் டேக்ஸியும் கண்ணிலிருந்து மறைய, மருத்துவமனை அலுவலகத்தினுள் நுழைந்து, அடையாள அட்டையைக் காண்பித்து,
வார்டு எண்ணின் நுழைவுத் தாளை வாங்கிக்கொண்டு நடக்கத் தொடங்கினாள்.
உள் நுழைவு வாசலை அடைந்தபோது,அங்கும் கேள்விகள்,! நுழைவு அனுமதித்தாளைக் காண்பித்து,அனுமதி கிட்ட, மீண்டும் நடந்தாள்.
இதுவும் கூட ஒரு நீள்வழிப்பாதை தான், ஒவ்வொரு வார்டாகக் கடந்து போகும்போதும், கம்பி போட்ட ஜன்னல்வழியாகத் தெரிந்த கோப முகங்கள், எரிச்சல் முகங்கள், கோபத்தில் கையை வீசிக்காட்டும் முகங்கள்,, என எல்லாம் கடந்து,கடந்து,

18 B எண் குறியிட்ட குறிப்பிட்ட வார்டுக்குள் நுழைந்தபோது , பணியாட்கள்
வார்டைக்கழுவிக்கொண்டிருந்தார்கள்.இவள் காணப்போயிருந்த லக்‌ஷ்மிகள் யாரையுமே காணோம். எல்லோருமே தொலைக்காட்சி பார்க்கும் அறையில் குழுமியிருந்தார்கள்.[அல்ல, அங்கு இருத்தப் பட்டிருந்தார்கள்.] தலைமை தாதியிடம் அனுமதி அட்டையைக் காண்பிக்க,, சிலர் முதலில் வெளியே வர அனுமதிக்கப்பட்டார்கள். வார்டுக்குப் பின்னால் இருந்த உணவுக்கூடத்தின் , வரிசை வரிசையான பெஞ்சில்,அவர்களை உட்காரச்சொல்லிவிட்டு,
வட்ட மேசை மேல் நிரப்பி வைக்கப் பட்டிருந்த , தட்டு, குவளைகளில் தேவையானவற்றை, எடுத்துக்கொண்டு வந்து , மேஜையில் நிரப்பி, ஒவ்வொரு தட்டாகப் பரிமாறினாள். உணவுப் பார்சல்களைப் பிரித்தும், டப்பர் வேரிலிருந்தும்,
எடுத்துப் பரிமாறினாள்.அவரவர் பங்கை, ,வேகமாக, கிட்டத்தட்ட, பிடுங்காத குறையாக வாங்கிக் கொண்டார்கள். பொறுமையாக ,நிதானமாக , சாப்பிடவில்லை. நிமிஷத்தில் தட்டு காலியாக,

‘அக்கா! லெட்சுமிக்கு மட்டும் கூட குடுத்தே!? இது ஒரு முறையீடு.
கிணுக்கிச் சிரித்தாள் இன்னொரு லக்‌ஷ்மி. ‘அதுக்குப் பைத்யம், நீ அது கிட்டெ பேசாதே!”
முதல் ஈடு முடிந்து விட்டது. அடுத்தது [கடையில் வாங்கிய ] சாடின் குழம்பும் ரொட்டி[பிரெட்] யும். இதற்குள் வேறு சிலரும், தொலைக்காட்சியிலிருந்து விடுபட்டு,ஜன்னலூடே நோக்கியதில், தட்டுகள் கண்ணில் பட தாமாகவே வந்து விட்டார்கள். சாடின் குழம்பும் பிரெட்டுமாக , அவர்களை வரிசைப் படுத்திவிட்டு தட்டை நீட்ட, ”சூ’! என்று ஒரே நிமிஷத்தில் தட்டு காலியாகிவிட்டது.யாருக்குமே போதவில்லை,என்பதை முகத்தின் வெறுமையே அறைந்து சொல்லியது.
கொண்டு போன பிரெட் சுத்தமாய் முடிந்து விட்டது. ஆனால் பெரிய பெரிய பிஸ்கட் பொட்டலம்,2 இருந்தது. அதே தட்டில் , பிஸ்கட்டும் ,மீதமிருந்த சாடின் குழம்பும் பரிமாற, நிமிஷத்தில் அதுவும் காலியாகிவிட,, இப்பொழுது ஜூஸ். ஆரஞ்சு ஜூசும், இவளே தயாரித்த எலுமிச்சை ஜூஸும், குவளைகளில் மாறி மாறி, ஊற்றிக் கொடுத்தாள்.
இப்பொழுது லக்‌ஷ்மிகள் சற்று நிதானப் பட்டிருந்தார்கள்.

’அக்கா! ஜூஸ் தாங்கா நல்லா இருந்திச்சி,!” ’ரொம்ப நல்லா இருக்குக்கா, இங்கே கேண்ட்டீன்ல வாங்கினியா?” ”ரே ரே ரே ரே ரே! ” , என்று திடீரென்று ஒரு லக்‌ஷ்மி வானை நோக்கி கூவினாள்.
”ஹ்யாங்! ஹியாங்! ஹியாங்! ”என வாய் பேச முடியாத, செவியும் கேட்காத , இன்னொரு லக்‌ஷ்மி கத்தினாள். இதற்குள் தொலைக்காட்சி அறையிலிருந்து மீதமிருந்தவர்களும் கூட வந்து விட, வசந்தி வாங்கித் தந்த பொட்டலத்தைப் பிரித்தாள்.
வீட்டிலிருந்து இவளே சமைத்த, அவியலும், எரிசேரியும் , புளி இஞ்சியும், தக்காளி சாதமும் , பிரித்து வைத்தாள். ஒவ்வொரு தட்டிலும் பகுத்துப் பகுத்து, பார்த்துப் பார்த்துப் பரிமாறினாள். ”அக்கா! எங்களுக்கு இதெல்லாம் குடுக்கலியே?
”நீங்க தான் சாப்பிட்டாச்சே? கொஞ்சம் கூட சாப்பிடாதவர்களுக்குத் தானே இதை கொடுக்கணும்” கேள்வி கேட்ட லக்‌ஷ்மியின் முகம் விழுந்து போனது. , வருத்தத்தோடு ,தூரப்போய் நின்று கொண்டாள். மற்றவர்கள் போகவில்லை.வளைந்து சுற்றி நின்று கொண்டு ,3வது செட், லக்‌ஷ்மிகள் சாப்பிடுவதையே, பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
” சுக்குப்,! சுக்குப்! சுடா பாஞாக்!, என்று சொல்லிய சீன லக்‌ஷ்மி, பாதி சாப்பாட்டிலேயே எழுந்து கொள்ள. சடாரென்று அந்த உணவை, மலாய் லக்‌ஷ்மி, தட்டோடு எடுத்துக் கொண்டுபோய்,நின்ற நிலையிலேயே சாப்பிடத் தொடங்கினாள்.
எல்லாமே முடிந்து விட்டது. மிட்டாய் பாக்கெட் மட்டும் தான் பாக்கி.
வருத்தப் பட்டுக்கொண்டு தூரப்போய் நின்று கொண்டிருந்த லக்‌ஷ்மியை, அழைத்து மிட்டாயை நீட்ட , ரொம்ப நன்றிக்கா! என்று வாங்கிக் கொண்டாள். மீதமிருந்ததை யாருக்கும் கொடுக்கவில்லை. மேஜையில் வைத்துவிட்டாள். வேண்டியவர்கள்
எடுத்து சுவைக்கட்டும், என்று நினைத்து முடிக்கு முன்னே, தள்ளுமுள்ளு,!மிட்டாய் பாக்கெட் போன இடம் தெரிவில்லை. ஆரஞ்சு ஜூஸ், எலுமிச்சை ஜூஸ், எல்லாம் முடிந்து, மொடா மொடாவாய்,பைப்பிலிருந்து, தண்ணீர் பிடித்துக் குடித்தார்கள்.
சாப்பிட்ட, தட்டு, குவளைகளை எல்லாம் அப்படி,அப்படியே போட்டுவிட்டு,பலரும் வந்த வேகத்திலேயே போக, 5 லட்சுமிகள் மட்டும் அத்தனை தட்டுக்களையும் வாஷ் பேசினில் , கொண்டுபோய் போட்டுவிட்டு ,கைகளையும் கழுவிக் கொண்டு.
இவள் அருகே வந்து அமர்ந்து கொண்டார்கள். ”அக்கா! நீ, அடுத்தவாட்டி வரும்போது, லட்சுமி இங்கே இருக்க மாட்டேன்.எங்கண்ணன் வந்து என்னைக் கூட்டிப்போயிடும்.
அப்றம் நீ, லட்சுமி, லெட்சுமின்னு தேடிக்கிட்டிருக்காதே??என்ன? சரியா?””![சென்ற முறை சென்றபோதும் இதையே தான் சொன்னாள்.]

சொல்லிவிட்டு, வாயை கை கொண்டு மூடிக்கொண்டு , கறை படிந்த பற்களால் குப், பென்று சிரித்தாள். அதற்கு மேலும் சகிக்காமல் இன்னொரு லக்‌ஷ்மி,”
“ ஏங்கா, வேறொண்ணும் எங்களுக்காக கொண்டாரலியா? என்று கேட்க, மாலதி, கொண்டு போயிருந்த கலர் வளையல்கள் இரண்டு செட்டைப் பிரித்து எல்லோருக்கும் போட்டு விட்டாள். முகமெல்லாம் மகிழ்ச்சியோடு, குள்ளமாய் , குண்டாயிருந்த லட்சுமி,
”அக்கா! அக்கா!, சின்ன தோடுக்கா! சின்ன சின்ன ஒரு தோடுக்கா!
ஒரே ஒரு தோடுக்கா! பெரிசு வேண்டாங்கா!பெரிசு மட்டும் நீ கொண்டந்தே,,
நான் வாங்கிக்கவே மாட்டேன். சின்னது போதுங்கா! அடுத்த வாட்டி வரும் போது வாங்கியாறியாக்கா?”” இப்படிக் கேட்ட இந்த லெக்‌ஷ்மியை இப்பொழுதுதான் பார்க்கிறாள். புதுசாய் வேறு வார்டிலிருந்து வந்திருக்கிறாள். கூந்தலை கோணா மாணாவென்று சொருகி, கழுத்தில் மங்கிய நீலக்கல் பாசிமாலை அணிந்திருந்தாள்.
”தோடு கேட்டேனு சொல்லி சொல்லியே என்னை மாடு மாறி அடிச்சாங்கா? எங் கண்ணு முன்னாலேயே, அவளை--- ----!, ரெண்டும் எப்பவும் கட்டிப் புடிச்சுட்டுத் தாங்கா கிடக்கும்.வெக்கம் கெட்டதுங்கக்கக்கா!
அக்கா! எனக்கு ஒரே ஒரு தோடு மட்டும் வாங்கித் தாக்கா!
”சரிம்மா!,அடுத்த முறை வாங்கி வறேன்”.
சதா பிருஷ்டத்தை சொறிந்துகொண்டும், குறு குறுவென்று இவளையே பார்த்துக்கொண்டே, சிரித்துக்கொண்டும், முறைத்துக்கொண்டும் , நடந்த பெண்களைப் பார்க்கப் பார்க்க ,மாலதிக்கு நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது துக்கம். நீட்டக் கரிமணி மாலை,கலர் மோதிரங்கள்,புதிதாய் வந்திருக்கும் வெள்ளைக்கல் அணிகலன்கள்,,
எனக் கொண்டு போயிருந்த அனைத்தையும் இவள் கையாலேயே , போட்டு விட்டாள்.
எதுவுமே தங்கம் அல்ல.ஆனால் வெறும் மலைவு விலை பொருட்களும் அல்ல.என்றாலும் தேடித்தேடி வாங்கிய பொருட்கள். இவர்கள் மகிழ்ச்சிக்காகவே பார்த்துப் பார்த்து வாங்கிய அணிகலன்கள்.விலை கூட எல்லாமாகச்சேர்த்தாலும் கூட குறிப்பிட்ட
தொகையே வரும்.ஆனால் லக்‌ஷ்மிகளின் முகத்தில் காணும் இந்த பரமானந்தத்தை எங்கேயுமே காண முடியாது. இங்குள்ள இந்திய லக்‌ஷ்மிகள் எல்லோருமே, கை நிறைய கலர் வளையல்கள் போட்டிருந்தார்கள்.எல்லோருடைய கழுத்திலும்
சொல்லி வைத்தாற்போல் ஏதாவது பாசிமணி மாலை, தொங்கியது.
மருத்துவமனை உடையைத் தவிர வேறு எதையுமே அவர்கள் அணியவில்லை.கனத்த முலையும், பெருத்த வயிறும், உள்ளாடை அணியாத சுதந்திரமுமாய், நடமாடுகிறார்கள்.எது கொடுத்தாலும் சாப்பிடுகிறார்கள்.
ரசித்து அல்ல, ருசித்தும் அல்ல..உணவு, உணவு மட்டுமே, இனி இவர்களின் ஒரே வாழ்வாதாரமாக இருக்கிறது. மருந்து,உணவு, தூக்கம் ,என இப்படித் தூங்கித் தூங்கியே இவர்கள், தடித்துக் கிடக்கிறார்கள். வெளியுலகம் என்பதே இனி இல்லை, என்பது கிட்டத்தட்ட முடிந்து போன முடிவாகி விட்ட அவலம். பார்க்க வரும் உறவினர்களும் கூடஇவர்களுக்கில்லை.எல்லோருமே குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள்.
கணவனால், அண்ணன் ,தம்பிகளால்,, உறவினர்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள்..
ஒரு சிலருக்கு மட்டும் வயதான பெற்றோர்கள் ,எப்போதாவது வந்து போவார்கள்.
அது கூட எத்தனையோ ஆண்டுகளுக்கு ஒரு முறை.”எப்படி வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறது? போனா இதுங்க அடங்கி இருக்குமா? கீலா [மன நிலை பிழறிய] புடிச்ச
உன் தங்கச்சி ,அங்கேயிருந்து போற வரைக்கும் வீட்டுக்கே வர மாட்டேன்னு எம் பொண்டாட்டி

கோவிச்சுக்கிட்டுப் போயிட்டா? என்னை என்ன செய்யச் சொல்றீங்க?”
பலரின் குமுறலும் குற்றச்சாட்டும் இப்படித்தானிருக்கிறது! என்கிறார் மூத்த தாதியொருவர்.
கணவன்மார்கள் மறு கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.அண்ணன் மார்களுக்கோ அவமானம்.
பெற்றவர்கள் மட்டும் தான் மனசு கலங்கி வீட்டில் குமுறிக் கொண்டிருப்பார்களோ?
இது யாரிட்ட சாபம்? மன நிலை ஏன் பிழறுகிறது? எவ்வளவு காலத்துக்கு இவர்கள் இந்த கர்மாவை அனுபவிக்க வேண்டும்? மாலதி முதன் முதலாக இங்கு பார்வையிட வந்ததே ஒரு விபத்து. குறும்படம் ஒன்றுக்கு கதை கேட்டபோது, ரியலிஸம் தான் வேண்டும் என்று டைரக்‌ஷன் குழு தீர்மானிக்க,, அனுமதி பெற்று ,இவள் கணவரோடு பார்க்க வந்தாள்.வந்த அன்றே அதிர்ச்சி,அழுகை , விவரிக்க இயலா வேதனை, எனக் கலவையில் உறைந்து போனாள். பல நாட்களுக்கு இங்கு சந்தித்த பெண்களின் முகங்களை மறக்கவே முடியவில்லை.
சல்லிகாசு பெறாத விஷயங்களுக்கெல்லாம் விழா எடுத்தல், விருந்து,கேளிக்கை,உல்லாஸப்பயணம் ,என, எதற்கெல்லாம்,
எதெதுக்கெல்லாமோ பணம் செலவழிக்கிறோம்.கடவுளைக் காண கோயிலுக்குச்சென்றால் தானா? ஈஷ்வரன் உண்டெனில், அம்பிகை விஸ்வரூபமெனில், இந்த லக்‌ஷ்மிகளின் கர்மாவுக்கு என்ன தான் தீர்வு?? ஏன்? ஏனிவர்களுக்கு மட்டும் இந்த துன்பம்? ஒரு நாள், ஒரே ஒரு நாளாவது, சில மணி நேரங்களையாவது, இவர்களுக்காக ஒதுக்க மறுக்குமளவுக்கு ,வெறுப்பை ஏன் இவர்கள் சம்பாதிக்கிறார்கள்.? அதீத மன உளைச்சல் மட்டும் தானா
இவர்கள் மன நிலை பிழறக் காரணம். ஆய்வுகளில் கூட மருத்துவர்களால் தக்க காரணம் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
ஆனால் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களில் பலர், மன நோயாளிகளாக இருந்ததாக வரலாறு சொல்கிறது. ஆனால் இந்த பேதை லக்‌ஷ்மிகளுக்கு , அபலை லக்‌ஷ்மிகளுக்கு மட்டும் என்றுமே விமோசனமே இல்லையா? நெஞ்சை அடைத்த துக்கத்தோடு,மாலதி அங்கிருந்து வெளியேறும்போது , கனத்த லக்‌ஷ்மி ஓடி வந்தாள்.
ஓடி வந்ததில் மூச்சிறைத்தது. மார்பு குலுங்கியது.

“அக்கா! ஒரு வெள்ளி இருந்தால் குடுக்கா! ஐஸ் தண்ணி வாங்கிக் குடிக்கணும்.
கொடுத்து விட்டு ரெண்டடி வைத்திருக்க மாட்டாள். “அக்கா! அக்கா! தோடு கேட்டேனே? மறந்துடாதேக்கா! ஒரு தோடுக்கா, ”சின்ன -----சின்னத் தோடுக்கா! சின்னத்தோடு போதுங்கா! மறந்துடாதேக்கா! ”சட்டை பித்தான் கழன்று,
முலைக்காம்பு தெரிய,, பிதுங்கி வழிந்த சதைக் குமிழைப் பற்றிய பிரக்ஞை கூட இன்றி,
சின்னத்தோடுக்காக , இந்த லக்‌ஷ்மி ஓடி வந்திருக்கிறாள்,ஆனால் மாலதிக்கு சகலமும் பதறியது. அவள் சட்டைப்பித்தானை ஒழுங்காக்கிவிட்டு, “அவசியம் கொண்டு வறேன் லக்‌ஷ்மி, !, என்று உறுதி கொடுத்துவிட்டு, திரும்பியும் பார்க்காமல் நடந்தபோது, அவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த வேதனையை விழுங்கி ,
மருத்துவமனை வாசலுக்கு வந்தால் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.
மாலதியை கொண்டு வந்து விட்ட அதே டேக்ஸி ஓட்டுனர்,”ஏறுங்கம்மா!” என்று கதவைத் திறந்து விட்டார். ”உங்க கூட வந்த அந்தப்பொண்ணு தான் இந்த நேரத்துக்கு நீங்க வந்திடுவீங்கண்ணு சொன்னாங்க! ஆளுங்களை ஏத்திக்கிட்டு , இங்கேயே தான் சுத்திக் கிட்டிருந்தேம்மா! ”என்றார், சுங்க ”வேண்டாம்மா! தயவுசெய்து காசு தராதீங்க! இந்தப் பணத்துக்கு,ஆஸ்பத்திரியில உள்ளவுங்களுக்கு ஏதாவது வாங்கிக் குடுங்கம்மா!,என்று கையெடுத்து அவர் கும்பிட, இவளால் பேசவே முடியவில்லை.
நெஞ்சைப் பிசைந்து பிசைந்து வந்தது. வழியெல்லாம் ”அக்கா! தோடுக்கா!என்ற குரலே செவிகளில் இம்சை செய்து கொண்டிருந்தது. சுங்கச் சாவடியின் அத்தனை படிகளும் ஏறி இறங்கி,பாஸ்போட்டில் முத்திரை குத்தும் அலைச்சலும் முடிந்து ,
வீடு வந்து சேர்ந்தபோது மிகவும் தளர்ந்து போனாள். கணவர் அவள் பைகளை வாங்கிகொண்டார்.குளித்து, பூஜை செய்யக்கூட தெம்பில்லை.
, பசித்தது. அகோரமாய் பசித்தது.காலையிலிருந்து அவள் எதுவுமே சாப்பிடவில்லை.
அதுவும் இது போன்ற இடங்களுக்குப் போவதென்றால் ஜலபானம் கூட அருந்துவதில்லை.
மாதம் ஒருமுறை, இங்கு போவதை, , ஜெபமாக, தியானமாகவே ,கொண்டிருந்தாள்.
கணவர் ’ஸ்ட்ரா பெர்ரி ‘!பாலை ஸ்ட்ரா போட்டுக் கொண்டு வந்து,
முதலில் இதைக்குடி,! பிறகு சாப்பிடலாம்!என்றார். [கணவருக்கு காப்பி, சாய கூடப்போடத்தெரியாது.} இவளுக்கு எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் போல், மனசு பரிதவித்தது. ”வேண்டாம், பிறகு பேசலாம்! முதலில் பாலைக் குடி, ”என்று மீண்டும் சொல்ல, அப்படியே அவரைக் கட்டிக் கொண்டு , ”லக்‌ஷ்மிகள்! என்றுசொல்லி, தொடரமுடியாமல், உடைந்து சிதறியவாறே, கரைந்து கரைந்து அழுதாள்.
அவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த வேதனை, வெடித்துச்சிதற, குலுங்கி குலுங்கி அழுதாள். ஒரு வாரமாக ஓடாதிருந்த சுவர்க்கடிகாரம், அப்பொழுதுதான் ”டாண் டாண் ”என்று அலறத்தொடங்கியது.


[முற்றும்}


கமலாதேவி அரவிந்தன்,
சிங்கப்பூர்

பிரசுரமான இதழ்கள்.
http://tamilmurasu.com.sg/
www.chennaionline.com
www.pathivukal.com
www.thinnai.com
Posted by kamalagaan